Saturday, April 12, 2008

ஏதேன் சமூகம்

கனிகள் இல்லை...
இலைகளும் இல்லை...
காயசண்டிகைப் பசியில்
கடிபட்ட கிளைகள்...
ஆனால்
சர்ப்பங்கள் பசியோடிருக்கின்றன.
நிர்வாண ஆடையணிந்து
ஆதாமும் ஏவாளும்...
குற்ற உணர்வு
குதறியெடுக்க
ஞானமர மறைவில்
யாரோ ஒருவர்.
- இன்னொருவன்

No comments: