பிறகு தான்
தெரிந்தது.
அது மாய நதி.
யதேச்சையாய்
பாதங்களைப்
பார்த்தேன்.
மிக ஆழத்தில்
ஜல்லி வேர்களும்
ஆணி வேரும்...
எனது கிளைகளில்
கழுகுகளின் கூடுகள்.
பழைய மாமிச வாசம்
புட்களை விரட்டின.
மார்பகப் பூக்களை
கவ்விப்பிடிருத்திருக்கும்
அட்டைப் பூச்சிகள்...
எல்லாம் குழப்பம்...
குனிந்துப் பார்த்தேன்
தடாலென தரையில்
விழுந்து
நொறுங்கியது
எனது மூளை...
அள்ளியெடுத்து
மறுபடியும் தலையில் வைத்துகொண்டேன்.
அவசரமாய்
கடிதம்
எழுத எழுதுகோலை
திறந்தேன்...
நாற்றம்
அறையை நிரப்பியது.
மூச்சு முட்டியது.
விழித்துக் கொண்டேன்.
தெரிந்தது.
அது மாய நதி.
யதேச்சையாய்
பாதங்களைப்
பார்த்தேன்.
மிக ஆழத்தில்
ஜல்லி வேர்களும்
ஆணி வேரும்...
எனது கிளைகளில்
கழுகுகளின் கூடுகள்.
பழைய மாமிச வாசம்
புட்களை விரட்டின.
மார்பகப் பூக்களை
கவ்விப்பிடிருத்திருக்கும்
அட்டைப் பூச்சிகள்...
எல்லாம் குழப்பம்...
குனிந்துப் பார்த்தேன்
தடாலென தரையில்
விழுந்து
நொறுங்கியது
எனது மூளை...
அள்ளியெடுத்து
மறுபடியும் தலையில் வைத்துகொண்டேன்.
அவசரமாய்
கடிதம்
எழுத எழுதுகோலை
திறந்தேன்...
நாற்றம்
அறையை நிரப்பியது.
மூச்சு முட்டியது.
விழித்துக் கொண்டேன்.
- இன்னொருவன்